< Back
மாநில செய்திகள்
தாய்- மகனுக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

தாய்- மகனுக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது

தினத்தந்தி
|
28 Jun 2022 9:02 PM GMT

உவரி அருகே தாய், மகனை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திசையன்விளை:

உவரி அருகே தாய், மகனை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

விவாகரத்து

நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள ஆவுடையாள்புரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 54). இவருடைய மகள் சரஸ்வதி (21). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ராஜகோபால் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று சரஸ்வதி தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

தகராறு

இந்த நிலையில் ராஜகோபாலுக்கு தம்பி உறவு முறையான ஏரல் பெருங்குளத்தை சேர்ந்த மாயாண்டி மகன் மாசானமுத்து (22), அவரது உறவினர்கள் சரஸ்வதி வீட்டுக்கு சென்றனர்.

அப்போது, அவர்கள் மீண்டும் ராஜகோபாலுடன் சரஸ்வதி சேர்ந்து வாழவேண்டும் என கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு சரஸ்வதி குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

அரிவாள் வெட்டு

இதில் ஆத்திரம் அடைந்த மாசானமுத்து, அவரது உறவினர்களான ஆவுடையாள்புரம் மாயாண்டி மனைவி செல்வி (52), வள்ளியூர் முருகன் மனைவி சுதா (35) ஆகியோர் இசக்கியப்பன், அவரது தாய் அழகு மாடத்தி (75) ஆகியோரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த 2 பேரும் ராதாபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக இசக்கியப்பன், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து சரஸ்வதி உவரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து, மாசானமுத்துவை கைது செய்தார். மற்றவர்களை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்