< Back
மாநில செய்திகள்
ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் கண்காணிப்புக்குழு ஆய்வு கூட்டம்
கரூர்
மாநில செய்திகள்

ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் கண்காணிப்புக்குழு ஆய்வு கூட்டம்

தினத்தந்தி
|
10 Jun 2023 6:50 PM GMT

ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் கண்காணிப்புக்குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் 2-ம் காலாண்டு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களின் வழக்குகளை உரிய காலத்திற்குள் விசாரணை மேற்கொண்டு, விசாரணை அறிக்கையினை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வன்கொடுமை தடுப்பு வழக்குகளை விரைந்து நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் நீதி பெற்றுத் தர வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்