< Back
மாநில செய்திகள்
பெரம்பூரில் டிராவல்ஸ் அலுவலகத்தில் பணம் திருட்டு
சென்னை
மாநில செய்திகள்

பெரம்பூரில் டிராவல்ஸ் அலுவலகத்தில் பணம் திருட்டு

தினத்தந்தி
|
6 Dec 2022 7:33 AM GMT

பெரம்பூரில் டிராவல்ஸ் அலுவலகத்தில் பணம் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

சென்னை ஓட்டேரி சத்தியப்பன் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். இவருடைய மனைவி திலகவதி (வயது 36). இவர், பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் உள்ள டிராவல்ஸ் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை அலுவலகத்தை திறக்க வந்த திலகவதி, முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து செம்பியம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் மர்மநபர்கள் டிராவல்ஸ் அலுவலகத்தின் பூட்டை உடைத்து ரூ.90 ஆயிரத்தை திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

மேலும் அருகில் இருந்த 2 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருப்பதும் தெரியவந்தது. இதுபற்றி செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்