< Back
மாநில செய்திகள்
காணாமல் போன முதியவர் கிணற்றில் பிணமாக மீட்பு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

காணாமல் போன முதியவர் கிணற்றில் பிணமாக மீட்பு

தினத்தந்தி
|
17 Jun 2023 6:30 PM GMT

காணாமல் போன முதியவர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, திருவளக்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 84). இவர் கடந்த 15-ந்தேதி காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் தேடியும் அவர்களால் கலியமூர்த்தியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் அதே பகுதியில் வேலாயுதம் என்பவர் விவசாய கிணற்றில் கலியமூர்த்தி பிணமாக மிதந்து கொண்டிருந்தார். இதனை கண்டவர்கள் இதுகுறித்து கலியமூர்த்தியின் குடும்பத்தினருக்கும், பாடாலூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு கலியமூர்த்தியின் குடும்பத்தினரும், போலீசாரும் வந்தனர். பின்னர் போலீசார் கிணற்றில் இருந்து கலியமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்