< Back
தமிழக செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதி தொழிலாளி பலி
திருப்பத்தூர்
தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதி தொழிலாளி பலி

தினத்தந்தி
|
10 Oct 2023 11:47 PM IST

ஆம்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதி தொழிலாளி பலியானார்.

ஆம்பூர்

ஆம்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதி தொழிலாளி பலியானார்.

ஆம்பூர் அருகே பனங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 35). இவர் தோல் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர்.

இந்தநிலையில் வேலை சம்பந்தமாக நேற்று முன்தினம் இரவு ரஞ்சித்குமார் மோட்டார் சைக்கிளில் ஆம்பூர் -பேரணாம்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த மினிலாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்