< Back
மாநில செய்திகள்
சுகாதாரத்துறை சார்பில் இல்லம் தேடி மருத்துவ முகாம்
கரூர்
மாநில செய்திகள்

சுகாதாரத்துறை சார்பில் இல்லம் தேடி மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
26 May 2022 6:46 PM GMT

சுகாதாரத்துறை சார்பில் இல்லம் தேடி மருத்துவ முகாம் நடந்தது.

நொய்யல்,

நொய்யல் அருகே சேமங்கி பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்ட குழுவினர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று வீடுகளில் உள்ள முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு, மற்றும் உடல் பரிசோதனை, தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.

மேலும் செய்திகள்