< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
அரியலூர்
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
8 Feb 2023 7:18 PM GMT

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு திருமானூர் ஊராட்சி மன்ற தலைவர் உத்திராபதி, துணைத்தலைவர் மணிமாறன் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளி தலைமை ஆசிரியை வனிதா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமுருகன் தட்சிணாமூர்த்தி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் பன்னீர்செல்வம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தனர்.

முகாமில் எலும்பு மூட்டு மருத்துவம், மனநல மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், கண் மருத்துவம், இயன் முறை சிகிச்சை மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளின் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களை மதிப்பீடு செய்து அவர்களுக்குரிய சிகிச்சை அளித்தனர். மேலும், உதவி உபகரணங்கள் தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களை பெற பரிந்துரை செய்தனர். மேலும் இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளி அடையாள அட்டை ஆகியவையும் வழங்கப்பட்டன. இம்முகாமில் திருமானூர் ஒன்றியத்தை சேர்ந்த 130 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் 21 நபர்கள் மருத்துவ காப்பீட்டுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். 19 நபர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்