< Back
மாநில செய்திகள்
அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ முகாம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
28 Sep 2023 6:45 PM GMT

கீழ்வேளூர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ முகாம் நடந்தது

சிக்கல்:

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அரசு ஆஸ்பத்திரியில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பவ திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் கண் சிகிச்சை, பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவம் உள்ளிட்ட பரிசோதனைகள் பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்பட்டு அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டது. இதில் நாகை மருத்துவ துறை இணை இயக்குனர் (குடும்ப நலன்) ஜோசப்பின் அமுதா, கீழ்வேளூர் பேரூராட்சி செயல் அலுவலர் குகன், பேரூராட்சி தலைவர் இந்திராகாந்தி, துணை தலைவர் சந்திரசேகரன், டாக்டர்கள், செவிலியர்கள், ஆஸ்பத்திரி பணியாளர்கள் மற்றும் கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்