< Back
மாநில செய்திகள்
மருத்துவ முகாம்
அரியலூர்
மாநில செய்திகள்

மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
24 March 2023 5:47 PM GMT

மருத்துவ முகாம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில், வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன் தலைமையிலான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் ரத்தம், இ.சி.ஜி., சிறுநீர், சளி உள்ளிட்ட பரிசோதனைகள், சிறப்பு கண் சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை பிரிவு, நரம்பியல் மருத்துவம் மற்றும் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை, தாய்மார்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்டவை செய்யப்பட்டன. இதில் சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். தொடர்ந்து நடைபெற்ற ரத்த தான முகாமில் 11 பேர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

மேலும் செய்திகள்