< Back
மாநில செய்திகள்
கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
நாமக்கல்
மாநில செய்திகள்

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
16 March 2023 6:45 PM GMT

பரமத்தி, எருமப்பட்டி, கொல்லிமலையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நாளை நடக்கிறது.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் வட்டார அளவிலான சுகாதார திருவிழா மற்றும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. 3 வட்டாரங்களில் வட்டாரத்திற்கு ஒரு மருத்துவ முகாம் வீதம் 3 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. நாளை (சனிக்கிழமை) பரமத்தி வட்டாரத்தில் அர்த்தநாரிபாளையம் கிராமத்தில் உள்ள பரமத்திவேலூர் தாலுகா லாரி உரிமையாளர் சங்க மண்டபத்திலும், 19-ந் தேதி எருமப்பட்டி வட்டாரத்தில் தூசூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், கொல்லிமலை வட்டாரத்தில் செம்மேடு வல்வில் ஓரி அரங்கிலும் நடைபெற உள்ளது.

குறிப்பாக தொலை தூரத்தில் வசிக்கும் கிராம புற மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இம்முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் தாய்-சேய் நலம், குழந்தைகள் நலம், தொற்றா நோய்கள், ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் மற்றும் புற்று நோய், காது மூக்கு தொண்டை, கண் மருத்துவம், வயது முதிர்ச்சியினால் ஏற்படும் நோய்கள், தோல் மருத்துவம் மற்றும் காசநோய் உள்பட அனைத்து நோய்களுக்கும் சிறப்பு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. மேலும் அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கும், தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கும் பரிந்துரை செய்யப்படுகிறார்கள். மேல் சிகிச்சை எடுக்க வேண்டி இருந்தால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உயர் மருத்துவ வசதி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்