< Back
மாநில செய்திகள்
கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்

தினத்தந்தி
|
18 March 2023 6:45 PM GMT

விழுப்புரம் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானாா்.

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள பானாம்பட்டை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மகள் வரலட்சுமி (வயது 21). இவர் கடலூர் அரசு கல்லூரியில் எம்.ஏ. வரலாறு 2-ம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம்போல் கடந்த 15-ந் தேதி கல்லூரிக்கு சென்ற அவர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர் பல இடங்களில் தேடியும் வரலட்சுமி கிடைக்கவில்லை. இதுகுறித்து சுந்தர்ராஜ் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்