< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாஸ்க் கட்டாயம் - மாவட்ட கலெக்டர் உத்தரவு
|16 April 2023 7:21 AM GMT
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாஸ்க் கட்டாயம் என மாவட்ட கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை,
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், கொரோனா பரவல் அதிகரிப்பால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் முக கவசம் அணிவது காட்டாயம் என மாவட்ட கலெக்டர் வளர்மதி அறிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என கலெக்டர் வளர்மதி அறிவுறுத்தி உள்ளார்.