< Back
மாநில செய்திகள்
தற்காப்பு கலை பயிற்சி
அரியலூர்
மாநில செய்திகள்

தற்காப்பு கலை பயிற்சி

தினத்தந்தி
|
17 Feb 2023 7:48 PM GMT

பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே புதுச்சாவடி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மனவள மற்றும் தற்காப்பு கலை பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது. தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான முன்னோடி திட்டங்களில் ஒன்றான இந்த பயிற்சியானது அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு, மன வளத்தை பெருக்கவும், மன பயம் போக்கவும், மன இறுக்கம், மன அழுத்தம் குறைத்து மன தைரியத்தை உருவாக்கி நற்சிந்தனையுடன் கற்றலில் மேம்படுத்திக்கொள்ள இந்த மனவள மற்றும் தற்காப்புகலை பயிற்சியானது அளிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்