< Back
மாநில செய்திகள்
புடலங்காய் வரத்து குறைவால் விலை உயர்வுதர்மபுரி உழவர் சந்தையில் ரூ.14-க்கு விற்பனை
தர்மபுரி
மாநில செய்திகள்

புடலங்காய் வரத்து குறைவால் விலை உயர்வுதர்மபுரி உழவர் சந்தையில் ரூ.14-க்கு விற்பனை

தினத்தந்தி
|
11 Sep 2023 7:30 PM GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் புடலங்காய் விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக புடலங்காய் விலை கணிசமாக குறைந்தது. நேற்று முன்தினம் தர்மபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ ரூ.6-க்கு விற்பனையானது. இந்த நிலையில் சந்தைக்கு புடலங்காய் வரத்து குறைந்ததால் நேற்று ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.8 விலை அதிகரித்தது.

தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ புடலங்காய் ரூ.14-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ ரூ.20 வரை விற்பனை ஆனது. புடலங்காய் விலை உயர்ந்ததால் அதை சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்