< Back
மாநில செய்திகள்
மாரியம்மன் கோவில் தேரோட்டம்
அரியலூர்
மாநில செய்திகள்

மாரியம்மன் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
24 May 2023 6:30 PM GMT

செந்துறை அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

மாரியம்மன் கோவில்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தின் மேற்கு பகுதியில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் வைகாசி மாதத்தில் ஒரு ஆண்டு தேர் திருவிழாவும், மற்றொரு ஆண்டு தீமிதி திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து நாள்தோறும் மாரியம்மன் வீதியுலாவும், சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்றன.

தேர்த்திருவிழா

விழாவின் சிகர நிகழ்வான தேர்த்திருவிழா நேற்று காலை தொடங்கியது. இதையொட்டி தேர் கட்டும் பணிகள் நிறைவு பெற்றதும் விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் விளைந்த மா, பலா, முந்திரி ஆகியவற்றை தேரில் கட்டி அலங்கரித்தனர். அதனைத் தொடர்ந்து திரளான பெண்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

தேரோடும் 4 வீதிகளில் தேர் வலம் வந்தது. மேலும், கடும் வெயில் காரணமாக மதியம் தேர் பாதி வழியில் திருத்தப்பட்டது. பின்னர் மாலை தேர்வடம் பிடிக்கப்பட்டு மீண்டும் கோவில் சன்னதியை வந்தடைந்தது. விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்