< Back
மாநில செய்திகள்
மாரத்தான் போட்டி
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மாரத்தான் போட்டி

தினத்தந்தி
|
22 Nov 2022 10:44 PM GMT

அம்பையில் மாரத்தான் போட்டி நடந்தது

அம்பை:

நெல்லை மாவட்ட காவல்துறையின் போதை மற்றும் தடுப்பு பிரிவு சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி அம்பையில் நடைபெற்றது. அம்பை தாலுகாவை சேர்ந்த பள்ளி, கல்லூரி மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகள் சார்பில் ஆண்கள், பெண்கள் என சுமார் 5000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆண்களுக்கான போட்டி அம்பை தாலுகா அலுவலகம் முன்பு இருந்து தொடங்கி, பஸ் நிலையம் முன்பு சென்று வடக்கு ரதவீதிவழியாக மீண்டும் மெயின் ரோடு வழியாக விக்கிரமசிங்கபுரம் வடக்கு ரதவீதியில் முடிந்தது.

பெண்களுக்கான போட்டி அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கி மெயின்ரோடு விக்கிரமசிங்கபுரம் வடக்கு ரதவீதியில் முடிவடைந்தது. காலை 6.15 மணிக்கு தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உதவி சூப்பிரண்டு பல்வீர் சிங் முன்னிலை வகித்தார். அம்பை இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்