< Back
மாநில செய்திகள்
மண்ணுழி திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
அரியலூர்
மாநில செய்திகள்

மண்ணுழி திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

தினத்தந்தி
|
8 Jun 2022 6:20 PM GMT

மண்ணுழி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து சேர்த்திக்கடன் செலுத்தினர்.

வி.கைகாட்டி,

தீமிதி திருவிழா

அரியலூர் மாவட்டம், மண்ணுழி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த வாரம் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து பாரதக்கதைகள் பாடப்பட்டும், இரவு சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடந்தன. மேலும் அர்ஜுனன் வில் வளைக்கும் நிகழ்ச்சி மற்றும் அரவான் நிகழ்ச்சி, திரவுபதி அம்மன் கூந்தல் முடிதல் நிகழ்ச்சி, காளியம்மன் நடன நிகழ்ச்சி ஆகியவை நடந்தது.

இந்நிகழ்ச்சிகளை தொடர்ந்து மண்ணுழி அரசு பள்ளி அருகே உள்ள ஏரியில் அக்னிகுண்டம் அமைக்கப்பட்டு தீமிதி திருவிழா நடந்தது. முன்னதாக திரவுபதி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

நேர்த்திக்கடன்

பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோவில் பூசாரி முதலில் தீமிதிக்க பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரவு அம்மன் வீதிஉலா, நாதஸ்வர நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்