< Back
மாநில செய்திகள்
கற்பகாம்பாள் கபாலீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கற்பகாம்பாள் கபாலீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை

தினத்தந்தி
|
19 April 2023 7:00 PM GMT

கோபால்பட்டியில் கற்பகாம்பாள் கபாலீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நடந்தது.

கோபால்பட்டியில் உள்ள விநாயகர், காளியம்மன், பாமாருக்மணி சமேத கிருஷ்ணர், கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 3-ந்தேதி நடந்தது. இதைத்தொடர்ந்து தினமும் சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் 48-ம் நாள் மண்டல பூஜை நேற்று கோவிலில் நடந்தது. இதையொட்டி விநாயகர், காளியம்மன், கற்பகாம்பாள், கபாலீஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இதைத்தொடர்ந்து கணபதி பூஜை, புண்ணியாகவாஜனம், வேதிகா அர்ச்சனை, ருத்ரசமக பஞ்சூக்தம், வேதபாராயணம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர், துர்க்கை, முருகன், நவக்கிரகங்கள், சொர்ண ஆகாச பைரவர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், அய்யப்பன் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனை சிவாச்சாரியார் சுப்பிரமணிய அஷ்வின் தலைமையிலான குருக்கள் செய்தனர்.

விழாவில் கோபால்பட்டி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மண்டல பூஜைக்கான ஏற்பாடுகளை கோபால்பட்டி நாயுடு மகாஜன சங்க அறக்கட்டளை நிர்வாகிகள் தாமோதரன், மோகன்ராம், மனோகரன், பாலகுரு, கந்தசாமி, அழகர்சாமி, பரந்தாமன், நாராயணமூர்த்தி, பி.அழகர்சாமி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்