< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

தினத்தந்தி
|
6 Sep 2023 9:52 AM GMT

கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கேரள மாநிலம் கோட்டையத்தை சேர்ந்தவர் ஷிஜு (வயது 46). இவர் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் இரும்பு கட்டுமான பொருட்களை உற்பத்தி செய்திடும் (பேப்ரிகேசன்) கடை நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு, பண்பாக்கத்தில் இருந்து உறவினரான லோகேஷ் (32) என்பவருடைய மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து புதகும்மிடிப்பூண்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். கன்னியம்மன் கோவில் மேம்பாலத்தின் கீழ் வரும் போது மோட்டார் சைக்கின் திடீரென நிலைதடுமாறி பின்னால் அமர்ந்து இருந்த ஷிஜு கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் வீரன் நகர் ஜெகனி கோட்டை தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). ஆட்டோ டிரைவர். கடந்த சனிக்கிழமை இவர் தனது மனைவி நளினி, 2 குழந்தைகள் மற்றும் உறவினர்கள் உடன் பெரியபாளையம் கோவிலுக்கு ஆட்டோவில் வந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் வெங்கல் அணைக்கட்டு பகுதியில் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து குடும்பத்துடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்த மரத்தில் இருந்த தேன்கூடு திடீரென கலைந்து தேனீக்கள் மரத்தடியில் சாப்பிட்டு கொண்டு இருந்த சரவணன் உள்பட அனைவரையும் கொட்டியது. இதில், படுகாயம் அடைந்த சரவணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். நேற்று முன்தினம் சரவணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெங்கல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்