< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் விபத்தில் காயம் அடைந்தவர் சாவு
தென்காசி
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் காயம் அடைந்தவர் சாவு

தினத்தந்தி
|
19 Oct 2023 6:45 PM GMT

கடையம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் காயம் அடைந்தவர் பரிதாபமாக இறந்தார்.

கடையம்:

கடையம் அருகே உள்ள வீராசமுத்திரத்தைச் சேர்ந்தவர் பீர்முகம்மது (வயது 64). இவர் மோட்டார் சைக்கிளில் சென்று பாய் வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று கடையம் அருகே கோதண்டராமபுரம் விலக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, முன்னால் சென்ற மூதாட்டி மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்பினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததில் பீர்முகம்மது பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்