< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் சாவு
விருதுநகர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் சாவு

தினத்தந்தி
|
2 Sep 2023 7:21 PM GMT

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.

காரியாபட்டி,

காரியாபட்டி பேரூராட்சி அண்ணாநகரை சேர்ந்தவர் ஜோசப் (வயது 60). இவருக்கு இடப்பிரச்சினை சம்பந்தமாக நீதிமன்றத்தில் இருந்து தீர்ப்பு வந்தது. அதன் நகலை பெறுவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தாா். அப்போது கல்குறிச்சி அருகே உள்ள சமத்துவபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே சென்ற ஆடு மோட்டார் சைக்கிளில் மோதியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த ஜோசப் சிகிச்சைக்காக காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
மேலும் செய்திகள்