< Back
மாநில செய்திகள்
போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா செல்ல முயன்றவர் கைது
திருச்சி
மாநில செய்திகள்

போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா செல்ல முயன்றவர் கைது

தினத்தந்தி
|
9 Jun 2022 9:12 PM GMT

போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

செம்பட்டு:

திருச்சி விமான நிலையத்தில் இருந்து கடந்த 7-ந் தேதி இரவு மலேசியா செல்ல இருந்த பயணிகளை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மதுரை பாண்டியன் நகர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பாபு செல்வராஜ்(வயது 46) என்பவர் போலியான முகவரியில் பாஸ்போர்ட் பெற்று மலேசியா செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் அவரை பிடித்து ஏர்போர்ட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Related Tags :
மேலும் செய்திகள்