< Back
மாநில செய்திகள்
அழுகிய நிலையில் ஆண் உடல்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

அழுகிய நிலையில் ஆண் உடல்

தினத்தந்தி
|
21 Sep 2023 6:45 PM GMT

தனுஷ்கோடி கடற்கரையில் அழுகிய நிலையில் ஆண் உடல் கிடந்தது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அடுத்த தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகே உள்ள தெற்கு கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் ஆண் உடல் கரை ஒதுங்கி கிடந்தது. இதை பார்த்த மீனவர்கள் இது தொடர்பாக கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடலோர போலீசார் அங்கு சென்று இறந்து கிடந்த ஆண் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. தொடர்ந்து உடலை கைப்பற்றி ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்