< Back
மாநில செய்திகள்
மகாசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மகாசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
9 July 2022 4:42 PM GMT

சங்கராபுரம் அருகே மகாசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் தரிசனம்

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே பொய்க்குணம் கிராமத்தில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். கொரோனா காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. பின்னர் சக்தி அழைத்தல், காப்புக்கட்டுதல் ஊரணி பொங்கல் வைத்தல், சப்த கன்னிகள் கரகம் எடுத்தல், சாகை வார்த்தல், கழுமரம் ஏறுதல், காளிகோட்டை இடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி பிற்பகலில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள அங்கே திரண்டு நின்ற பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. இதில் பொய்க்குணம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்