< Back
மாநில செய்திகள்
மகா காளியம்மன்- மகா  மாரியம்மன்  கோவில் கும்பாபிஷேகம்
கரூர்
மாநில செய்திகள்

மகா காளியம்மன்- மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
17 Jun 2022 6:22 PM GMT

தோகைமலை, நச்சலூர் பகுதிகளில் உள்ள மகா காளியம்மன்- மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

தோகைமலை,

கும்பாபிஷேகம்

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கள்ளையில் பிரசித்தி பெற்ற மகா காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்த ஊர் முக்கியஸ்தர்கள், விழா கமிட்டியினர் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி கும்பாபிஷேகம் கடந்த 15-ந்தேதி முதல் கால பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தன.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் மகா காளியம்மன் கோவில் கோபுர கலசத்தில ்புனிதநீரை ஊற்றி வைத்து கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நச்சலூர்

குளித்தலை வட்டம், நெய்தலூர் ஊராட்சி கவண்டம்பட்டி அண்ணாநகரில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது. பின்னர் கோவிலில் யாகசாலை வளர்க்கப்பட்டு முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

பின்னர் மகா மாரியம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தன். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்