< Back
மாநில செய்திகள்
காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு; ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி
மாநில செய்திகள்

காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு; ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி

தினத்தந்தி
|
25 May 2022 8:57 AM GMT

ஒகேனக்கலில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால், நீர்வீழ்ச்சியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தர்மபுரி,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, 51 ஆயிரம் கனஅடி வரை நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது மழை குறைந்து, காவிரி ஆற்றில் 10 ஆயிரம் கனஅடி மட்டுமே நீர்வரத்து உள்ளதால், ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனால் ஒகேனக்கல் பகுதியில் மீண்டும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்