< Back
மாநில செய்திகள்
மாட்டுவண்டி மீது லாரி மோதி 2 பேர் படுகாயம்
கரூர்
மாநில செய்திகள்

மாட்டுவண்டி மீது லாரி மோதி 2 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
21 March 2023 6:30 PM GMT

மாட்டுவண்டி மீது லாரி மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தவுட்டுப்பாளையம் அருகே உள்ள மோதுக்காடு பகுதி சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் பிரபாகரன் (வயது 20). இவர் சொந்தமான மாட்டு வண்டி வைத்து வாடகைக்கு ஒட்டி வருகிறார். இந்நிலையில் பிரபாகரன் தனக்கு சொந்தமான மாட்டு வண்டியை சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது மாட்டு வண்டியில் அதே பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவர் அமர்ந்திருந்தார். மாட்டு வண்டி தேசிய தளவாபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது சேலத்தில் இருந்து கரூர் நோக்கி வந்த கொரியார் சர்வீஸ் லாரி ஒன்று பிரபாகரன் ஓட்டிச் சென்ற மாட்டு வண்டிமீது மோதியது. இதில் மாட்டு வண்டியில் அமர்ந்திருந்த பிரபாகரன் மற்றும் விஜய் ஆகியோருக்கும், 2 மாடுகளுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து படுகாயம் அடைந்த பிரபாகரன், விஜய் ஆகியோர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், 2 மாடுகளும் தளவாபாளையம் அரசு கால்நடை மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கபட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, லாரி டிரைவர் நெல்லை மாவட்டம் கல்லடைகுறிச்சி சின்னப்பள்ளிபாசல் தெருவை சேர்ந்த ஷேக்கலாவுதீன் (49) என்பவரை கைது செய்தனர். மேலும் அந்த லாரியும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்