< Back
மாநில செய்திகள்
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி

தினத்தந்தி
|
30 Dec 2022 8:42 PM GMT

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நடந்த அரசு விழாவில் மாநில அளவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கி, அதனை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு கடனுதவிகள் வழங்கும் விழா நடந்தது. பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு 532 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 6 ஆயிரத்து 546 உறுப்பினர்களுக்கு ரூ.28 கோடியே 76 லட்சம் மதிப்பிலான பல்வேறு கடனுதவிகளை வழங்கினார்.

மேலும் செய்திகள்