< Back
மாநில செய்திகள்
தானியங்கி மது விற்பனை - தமிழக அரசுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்
மாநில செய்திகள்

தானியங்கி மது விற்பனை - தமிழக அரசுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தினத்தந்தி
|
29 April 2023 10:39 AM GMT

தானியங்கி மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை தானியங்கி முறையில் மதுபானம் விற்பனை செயும் இயந்திரத்தை டாஸ்மாக் நிர்வாகம் சோதனை அடிப்படையில் 4 எலைட் மதுபான கடைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஏ.டி.எம். இயந்திரம் போல் செயல்பட்டு மது மற்றும் பீர் வகைகளை விநியோகம் செய்ய பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தில் உள்ள தொடுதிரை மூலம் தேவையான மதுபான வகையை தேர்வு செய்து, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் பணத்தை செலுத்தினால், தானாக மதுபானம் இயந்திரத்தில் இருந்து வெளியே வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மதுபாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதாக எழுந்த புகாரையடுத்து, பணம் செலுத்தி மதுபானத்தை பெற்றுக் கொள்ளும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தானியங்கி மது விற்பனைக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இளைஞர்களை சீரழிக்கும் வகையில், தானியங்கி மூலம் மதுபான விறபனையை துவக்கி உள்ளதாக விமர்சித்துள்ள அவர், தானியங்கி மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்