< Back
மாநில செய்திகள்
ஓட்டல் பின்புறம் பதுக்கிய மதுபாட்டில்கள் பறிமுதல்; பெண் கைது
அரியலூர்
மாநில செய்திகள்

ஓட்டல் பின்புறம் பதுக்கிய மதுபாட்டில்கள் பறிமுதல்; பெண் கைது

தினத்தந்தி
|
4 July 2022 7:12 PM GMT

ஓட்டல் பின்புறம் பதுக்கிய மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு பெண் கைது செய்யப்பட்டார்.

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் விக்கிரமங்கலம் மெயின் ரோடு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் விக்கிரமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்த அம்பிகா(வயது 43) என்பவரது ஓட்டலில் சோதனை செய்தனர். அப்போது அந்த ஓட்டலின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்பிகாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்