< Back
மாநில செய்திகள்
வீடு, வீடாக சென்று ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி மும்முரம்; பொதுமக்கள் ஒத்துழைக்க திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

வீடு, வீடாக சென்று ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி மும்முரம்; பொதுமக்கள் ஒத்துழைக்க திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

தினத்தந்தி
|
29 Aug 2022 10:26 AM GMT

வாக்காளர்களின் வீடு, வீடாக சென்று ஆதார் எண்ணை பெற்று வாக்காளர் பட்டியல்களுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருவதால் ஒத்துழைக்குமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆதார்-வாக்காளர் பட்டியல்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர், முதன்மை அரசு செயலாளர் அவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களிடம் இருந்து தன் விருப்ப அடிப்படையில் ஆதார் எண்ணை பெற்று வாக்காளர் பட்டியலில் பதிவு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் 1-8-2022 முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி வாக்காளர் பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

படிவம் 6-பி

அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 657 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, அவர்கள் வீடு, வீடாக சென்று ஆதார் எண் விவரங்களை படிவம் 6-பியில் வாக்காளர்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் பெற்று வருகின்றனர்.

மும்முரமாக நடைபெற்று வரும் இப்பணியினை மேற்பார்வையிட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மேற்பார்வையாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இப்பணியினை கண்காணித்திட அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் துணை கலெக்டர் நிலையில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இணையதளத்திலும் இணைக்கலாம்

ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள் இருப்பின் அவர்களிடமிருந்து படிவம் 6-பியில் குறிப்பிடப்பட்டுள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை அளித்து வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கலாம். மேலும் வாக்காளர்களும் தாங்களே நேரடியாக தங்களது ஆதார் எண்ணை www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது பதிவிறக்கம் செய்தோ வாக்காளர் பட்டியல் உடன் இணைக்கலாம் என்றும், பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்