< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
ஊத்தங்கரை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
|27 Oct 2022 6:45 PM GMT
ஊத்தங்கரை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டை பக்கமுள்ள வெள்ளகுட்டையை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 32) விவசாயி. இவர் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சார வயரில் கைப்பட்டு தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த சத்யராஜ் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.