< Back
மாநில செய்திகள்
தன்னார்வலர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தன்னார்வலர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி

தினத்தந்தி
|
2 March 2023 8:49 PM GMT

தன்னார்வலர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் பெரம்பலூர் வட்டார வள மையத்திற்குட்பட்ட புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி நேற்று அந்த மையத்தில் அளிக்கப்பட்டது. பயிற்சியினை மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி முன்னிலை வகித்தார். ஆசிரிய பயிற்றுனர்கள், கருத்தாளர்கள் வாழ்வியல் பயிற்சி அளித்தனர். பின்னர் தன்னார்வலர்களுக்கு ஸ்லோகன் போட்டி மற்றும் கற்போர்களுக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டது. அதில் முதல் 2 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்