< Back
மாநில செய்திகள்
வாழ்வியல் திறன் பயிற்சி
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

வாழ்வியல் திறன் பயிற்சி

தினத்தந்தி
|
7 March 2023 6:42 PM GMT

புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தில் வாழ்வியல் திறன் பயிற்சி

வேதாரண்யம்:

வேதாரண்யம் வட்டார வளமையத்தில் 'புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தின் கீழ் வாழ்வியல் திறன் பயிற்சி நடந்தது. பயிற்சியை வட்டார வளமையை மேற்பார்வையாளர் அசோக்குமார் தொடங்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆறுமுகம், அருள்மணி, தமிழ் செல்வன், இல்லம் தேடிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் அரசமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சட்டம் சார்ந்த விழிப்புணர்வு குறித்து வக்கீல் பன்னீர்செல்வம், ஆரோக்கியம், மருத்துவம், வருமுன்காப்போம் குறித்து டாக்டர் சாகிதா பானு, உண்மை உழைப்பு உயர்வு குறித்து வசந்தி செல்வகுமார், தொழில்முனைதல் குறித்து ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சித்திரவேலு ஆகியோர் பேசினா். பயிற்சியில், வேதாரண்யம் வட்டாரத்திலுள்ள புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையங்களில் பணிபுரியும் 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்