< Back
மாநில செய்திகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை போராட்டம்
விருதுநகர்
மாநில செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை போராட்டம்

தினத்தந்தி
|
10 Oct 2023 7:40 PM GMT

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு பாவாலி கிராம பஞ்சாயத்தின் வரவு, செலவு விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தர வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் அணி அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். யூனியன் கமிஷனர் கற்பகவல்லி விரைவில் தர ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது.

மேலும் செய்திகள்