< Back
மாநில செய்திகள்
கந்தம்பாளையம் அருகே2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்தது ஏன்?கடிதத்தில் உருக்கமான தகவல்
நாமக்கல்
மாநில செய்திகள்

கந்தம்பாளையம் அருகே2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்தது ஏன்?கடிதத்தில் உருக்கமான தகவல்

தினத்தந்தி
|
16 July 2023 7:00 PM GMT

கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்தது ஏன் என்பது குறித்து கடிதத்தில் எழுதியிருந்த உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.

தற்கொலை

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள வெட்டுக்காட்டுபுதூர் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 30). இவருடைய மனைவி சசிகலா (26). இவர்களுக்கு திவித் (5), தர்ஷன் (3) என 2 மகன்கள் இருந்தனர். தனசேகரன் தினமும் இரவு மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து சசிகலாவிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்றும் மது குடித்து விட்டு தனசேகரன், சசிகலாவிடம் தகராறு செய்துள்ளார்.

இதனால் மனம் உடைந்த சசிகலா அப்பகுதியில் உள்ள கிணற்றுக்கு குழந்தைகளுடன் சென்றார். பின்னர் 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகலா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணையை தொடங்கினர்.

கணவர் தான் காரணம்

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் சசிகலாவின் தாய்மாமன் கரைப்பாளையம் பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவர் சசிகாவின் வீட்டில் சோதனை செய்தபோது நோட்டில் ஒரு கடிதத்தை சசிகலா எழுதி வைத்திருந்ததை பார்த்தார். அந்த கடிதத்தில் கணவர் தனசேகரன் தினமும் மதுகுடித்துவிட்டு போதையில் தகராறு செய்து வந்தார்.

மேலும் அவருடைய அக்காள் தீபாவை அருகில் உள்ள ஊரில் திருமணம் செய்து வைத்தும், அவர் கணவர் வீட்டுக்கு செல்லாமல் இங்கேயே இருந்து வருகிறார். எனது திருமணத்தின்போது கொடுத்த 20 பவுன் நகைகளையும் எனது கணவர் வாங்கி கொண்டார். மேலும் எனது தந்தையிடம் இருந்து ரூ.10 லட்சம் வரை பெற்று கொண்டும் என்னை நிம்மதியாக வைக்கவில்லை. இதனால் நிம்மதியாக வாழ முடியவில்லை. எனது சாவுக்கு காரணம் கணவர் தனசேகரன் தான் என்று எழுதியிருந்தார்.

கைது

இந்த நிலையில் நல்லூர் போலீசார் நேற்று தனசேகரனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்