மாநில செய்திகள்
கனமழை: நீலகிரியில் 2 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
மாநில செய்திகள்

கனமழை: நீலகிரியில் 2 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தினத்தந்தி
|
29 Jun 2024 1:43 AM GMT

கனமழை காரணமாக நீலகிரியில் 2 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அம்மாவட்டத்தின் கூடலுர், பந்தலூர் தாலுகாக்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்