< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
வழிவிடும் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
|6 Jun 2022 7:43 PM GMT
வழிவிடும் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
அன்னவாசல்:
இலுப்பூர் மேலப்பட்டியில் வழிவிடும் விநாயகர் கோவிலில் புனரமைப்பு பணிகள் முடிந்ததையடுத்து அப்பகுதியினர் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் காலை கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜைகள் நடந்தன. இதையடுத்து சிவாச்சாரியார்கள் விநாயகர் கோவில் மூலஸ்தான விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.