< Back
மாநில செய்திகள்
வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
21 July 2023 7:30 PM GMT

திண்டுக்கல் கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு வக்கீல் ஆனந்த முனியராசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், இதற்கு காரணமான அனைவருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், இந்த சம்பவத்தை தடுக்க தவறிய மத்திய, மணிப்பூர் அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் வக்கீல்கள் கென்னடி ஜெரால்டு, சகாயராஜ், உதயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்