< Back
மாநில செய்திகள்
நீதிமன்ற பணிகளை வக்கீல்கள் புறக்கணிப்பு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

நீதிமன்ற பணிகளை வக்கீல்கள் புறக்கணிப்பு

தினத்தந்தி
|
2 Jun 2022 7:39 PM GMT

நீதிமன்ற பணிகளை வக்கீல்கள் புறக்கணித்தனர்.

அதிக வழக்குகள் இருப்பதால் நீதிமன்றத்தின் பணி சுமையை குறைக்கும் வகையிலும், வழக்காடிகளுக்கு விரைவில் வழக்குகளுக்கு தீர்வு கிடைக்கவும் பெரம்பலூரில் கூடுதல் சார்பு நீதிமன்றம் விரைவில் அமைத்திட வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட வக்கீல்கள் சங்கத்தை சேர்ந்த வக்கீல்கள் 2 நாள் நீதிமன்ற பணிகள் புறக்கணிப்பை நேற்று தொடங்கினர். இதனால் பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிகள் பாதிக்கப்பட்டன. வக்கீல்கள் இன்றும் (வெள்ளிக்கிழமை) நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.

மேலும் செய்திகள்