< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் விபத்தில் சட்டக்கல்லூரி மாணவர் பலி நண்பர் படுகாயம்
சென்னை
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் சட்டக்கல்லூரி மாணவர் பலி நண்பர் படுகாயம்

தினத்தந்தி
|
3 Sep 2023 6:32 AM GMT

சாலையோரம் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சட்டக்கல்லூரி மாணவர் பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.

கடலூர் மாவட்டம், நெய்வேலியை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன் (வயது 21). இவர், சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் சட்டக்கல்லூரியில் விடுதியில் தங்கி 4-ம் ஆண்டு படித்து வந்தார். லட்சுமி நாராயணன், நேற்று அதிகாலை விருகம்பாக்கத்தை சேர்ந்த தன்னுடைய நண்பர் ரோகித் (23) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு ரெயில் நகர் அருகே சென்றபோது சாலை ஓரத்தில் நின்றிருந்த லாரியின் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த லட்சுமி நாராயணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ரோகித், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான லட்சுமிநாராயணன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் சுகுமார் (67) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்