< Back
மாநில செய்திகள்
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
திருவாரூர்
மாநில செய்திகள்

தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தினத்தந்தி
|
13 Feb 2023 7:00 PM GMT

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

நீடாமங்கலம் அருகே உள்ள சோணாப்பேட்டை கிராமம் பெரியார் தெருவை சேர்ந்த செந்தில்குமார் மனைவி சுதா (வயது32). இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகளாகிறது. அருண்குமார் (14) என்ற மகனும், சுபஸ்ரீ (12) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் சம்வத்தன்று வீட்டில் தனது சேலையில் தூக்குப்போட்டு சுதா தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்