< Back
மாநில செய்திகள்
லாரி மோதி தொழிலாளி சாவு
மதுரை
மாநில செய்திகள்

லாரி மோதி தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
14 Aug 2023 1:00 AM GMT

லாரி மோதி தொழிலாளி உயிரிழந்தார்

அலங்காநல்லூர்,

அலங்காநல்லூர் அருகே உள்ள பொதும்பு கிராமத்தை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 32). தொழிலாளி. இவர் நேற்று சிக்கந்தர் சாவடி பகுதியில் இருந்து பொதும்புவிற்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அருள்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து தொடர்பாக அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
மேலும் செய்திகள்