< Back
மாநில செய்திகள்
லாரி மோதி தொழிலாளி சாவு
சிவகங்கை
மாநில செய்திகள்

லாரி மோதி தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
12 Aug 2023 7:00 PM GMT

லாரி மோதி தொழிலாளி உயிரிழந்தார்.

காரைக்குடி,

செட்டிநாடு போலீஸ் சரகம் சூரக்குடியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 42). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு காரைக்குடி-திருச்சி பைபாஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காரைக்குடியில் இருந்து வந்த லாரி, எதிர்பாராத விதமாக மாரிமுத்துவின் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கே அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே மாரிமுத்து இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் செட்டிநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி, லாரி டிரைவர் திருவேகம்பத்தூரை சேர்ந்த அழகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
மேலும் செய்திகள்