< Back
மாநில செய்திகள்
அரசு விரைவு பஸ் மோதி தொழிலாளி பலி
சேலம்
மாநில செய்திகள்

அரசு விரைவு பஸ் மோதி தொழிலாளி பலி

தினத்தந்தி
|
18 Aug 2022 8:15 PM GMT

அரசு விரைவு பஸ் மோதி தொழிலாளி பலியானார்.

ஓமலூர்:-

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் உம்மியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 47). சலவைத்தொழிலாளி. இவர் நேற்று மாலை சேலத்தில் இருந்து தொப்பூர் உம்மியம்பட்டியை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது தீவட்டிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற அரசு விரைவு பஸ், முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ரோட்டில் விழுந்த கோவிந்தராஜ், பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்