< Back
மாநில செய்திகள்
கூலித்தொழிலாளி கைது
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கூலித்தொழிலாளி கைது

தினத்தந்தி
|
6 July 2022 4:32 PM GMT

வியாபாரியை தாக்கிய கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

பழனி அருகே உள்ள புதுஆயக்குடி பகுதியை சேர்ந்தவர் முகமதுஅலி (வயது 60). இவர், அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பாண்டியராஜன் (31). இவர், முகமதுஅலியின் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டார்.

மேலும் பாண்டியராஜன், முகமதுஅலியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்