< Back
மாநில செய்திகள்
அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்
கரூர்
மாநில செய்திகள்

அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
12 Sep 2022 6:14 PM GMT

அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.

வேலாயுதம்பாளையம் அருகே மண்மங்கலம் அண்ணாநகரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

இதேபோல் க.பரமத்தி அருகே பி.அணைப்பாளையம் கிராமம், காங்கேயம்பாளைத்தில் உள்ள கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி காவிரியில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து முதல் கால பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

இதேபோல் தோகைமலை அருகே கோட்டப்பட்டியில் உள்ள மகா காளியம்மன் கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் மகா காளியம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்