< Back
மாநில செய்திகள்
விநாயகர் உள்ளிட்ட3 கோவில்களில் கும்பாபிஷேகம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

விநாயகர் உள்ளிட்ட3 கோவில்களில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
1 March 2023 6:45 PM GMT

ரிஷிவந்தியம் அரியாந்தக்காவில் விநாயகர் உள்ளிட்ட3 கோவில்களில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் மதுரா அரியாந்தக்கா கிராமத்தில் அருள் பாலித்து வரும் விநாயகர், பாலமுருகன் மாரியம்மன், பெருமாள் ஆகிய 3 கோவில்களில் கும்பாபிஷேக விழா இன்று(வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இன்று காலை 9 மணிக்கு கணபதி ஹோமம், மகாலட்சுமி, நவகிரக ஹோமம், தீபாராதனையும், மாலையில் வருண பூஜை, வாஸ்து சாந்தி, முதற்கால யாக சாலை பூஜை நடக்கிறது. பின்னா் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு கோ பூஜை, தனபூஜை உள்ளிட்ட பூஜைகளும் 8 மணிக்கு தத்துவார்ச்சனை, நாடிசந்தானம், மூலமந்திரஹோமம், 8.45 மணிக்கு 2-வது கால யாகபூஜை, தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல், 10.30 மணிக்குள் மங்கல வாத்தியங்கள் இசைக்க யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பட்டு விநாயகர், பாலமுருகன் மாரியம்மன், பெருமாள் ஆகிய 3 கோவில் கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை அரியாந்தக்கா கிராமமக்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்