< Back
மாநில செய்திகள்
முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கடலூர்
மாநில செய்திகள்

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
24 Aug 2023 7:20 PM GMT

கச்சிராயநத்தம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த கச்சிராயநத்தம் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் 22-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதையடுத்து வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் நேற்று முன்தினம் காலையில் விக்னேஸ்வர பூஜை, பூர்வாங்க பூஜை, நாடி சந்தானம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடா்ந்து யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்