< Back
மாநில செய்திகள்
நொய்யல், நச்சலூர் பகுதிகளில் உள்ள மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்
கரூர்
மாநில செய்திகள்

நொய்யல், நச்சலூர் பகுதிகளில் உள்ள மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
19 Jun 2022 5:58 PM GMT

நொய்யல், நச்சலூர் பகுதிகளில் உள்ள மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது

கும்பாபிஷேகம்

கரூர் மாவட்டம், ெநாய்யல் அருகே பேச்சிப்பாறையில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. பின்னர் நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து யாகசாலையில் வைத்து பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது.யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் மகா மாரியம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

நச்சலூர்

நச்சலூர் அருகே சவாரி மேட்டில் உள்ள ஓம் சக்தி மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் ஓம் சக்தி மாரியம்மன் கோவில் கோபுர கசலத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்